நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும்,நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இன்று(16) கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்க காரியலயத்தில் அதன் தலைவர் அல்ஹாஜ் எம்.எம் ஜமால்த்தீன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு நடந்து முடித்த தேர்தலில் கல்முனை தொகுதியில் பெருவாரியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும்,எனக்கும் வழங்கி வெற்றி பெற செய்த கல்முனை மக்களுக்கும், குறிப்பாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்த்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்ளுவதோடு எதிர்கால அரசியல் செயற்பாடுகளிலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் என்றும் நன்றியுனர்வோடு இருப்பேன் எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர்,உப தலைவர் ஏ.எச் தன்சூல்,மற்றும் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.கபூல் ஆஸாத்,எம்.ஐ.எம் நஜீம்,அல்ஹாஜ் எம்.கரீம்,எஸ்.எம்.நிசார்,எம் தன்சீல், ஏ.எப்.எம் பர்சான் உட்பட ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment