முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பிற்கு உள்ள பொலிஸார் விலகல்; ரணிலின் நிலை?




J.f.Kamila bagem-
பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அடுத்த வாரம் முதல் அப்பணியில் இருந்து விலக்கிக்கொள்ளவுள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி 81 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரில் சிலர் தற்சமயம்கூட பொலிஸ் அப்பணியில் இருந்து விலகியுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :