உருவச்சிலை கறுப்புத் துணியால் மூடி போராட்டம்!


J.f.காமிலா பேகம்-
மிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி அமரர் ரவிராஜின் யாழ்ப்பாணத்திலுள்ள உருவச் சிலையை கறுப்புத் துணியால் மூடி எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிய நிலையில், அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டிருந்ததோடு திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்பட்டதாகவும், சுமந்திரன் சதி செய்ததாகவும் கூறி நேற்று பாரிய களேபரம் ஏற்பட்டது.
எனினும் இறுதியில் சுமந்திரன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி யாழ். சாவக்கச்சேரியில் அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலை மீது கறுப்பு சால்வையொன்று போடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :