நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க மைத்திரி குழு தீர்மானம்?


J.f.காமிலா பேகம்-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இம்முறை நாடாளுமன்றத்திற்கு சுதந்திரக் கட்சியிலிருந்து 16 உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கின்றனர்.
சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கின்ற பௌத்த பிக்குமார்களே மேற்படி யோசனையை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே சுயாதீனமடைவது குறித்த யோசனை அடுத்தவாரம் கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடுகின்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பரிந்துரை நிராகரிக்கப்பட்டமை, அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை போன்ற பல குழப்பங்களுக்கு சுதந்திரக் கட்சி முகங்கொடுத்துள்ள நிலையிலேயே இந்த யோசனையும் தற்சமயம் முன்வைக்கப்பட்டிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :