இறக்காமம் முன்பள்ளி பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


லங்கையில் covid-19 அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மிக நீண்ட கால விடுமுறையின் பின்னர் முன்பள்ளி பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் RM இம்டாட் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் ஜனாப் எம் எம் நசீர் அவர்களும் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபீர் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் வளாளராக டாக்டர் ரஷீன் MOH அவர்கள் கலந்து கொண்டார்கள். 
இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிஸ்வானுல் ஜன்னாஹ் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் MH. வஹாப் மற்றும் பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் முன்பள்ளி சிறார்களை Covid 19 வைரஸில் இருந்து பாதுகாப்பதற்கான அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் MOH அவர்களினால் தெளிவாக வழங்கப்பட்டது அத்துடன் Covid-19 க்கு பின்னர் ஏற்பட்ட உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது மற்றும் அதனை எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :