பெரிய நீலாவணைக்கு வந்த அபூர்வ சுறா ஒன்று மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது -படங்கள்

சிறிதரன்-

பெரிய நீலாவணை கடற்கரையில் இன்று காலை கரைவலை மீனவர் ஒருவரின் வலையில் மாட்டிக்கொண்ட அபூர்வ சுறா இன மீன் ஒன்று சுமார் ஆயிரம் கிலோ இடைகொண்டதாக கரைக்கு இழுத்து எடுக்கப்பட்டதும் அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இம்போட்மிரர் செய்தியாளர் சிறிதரன் தெரிவிக்கையில்:


குறித்த மீன் பெரிய நீலாவனை திருநா என்பவரின் வலையிலேயே சிக்கி கரைக்கு வந்தது. ஆனால் இதனைக் கேள்வியுற்ற நீரியல் வளத்துறையினர் ,விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் ஆகியோர் குறித்த இடத்துக்கு வருகை தந்தனர். அதன் பின்னர் இந்த மீன் இனமானது அருகி வரும் ஒன்று என்றும் இது சமைப்பதற்கு உகந்தது அல்ல என்று அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய மீனவர்கள் அதனை கடலுக்குள் மீண்டும் அனுப்பி விட்டனர்.

குறித்த மீனின் வருகையை கேள்வியுற்ற பிரதேச மக்கள் சற்று முன்னர் மீனைப்பார்பையிட கடற்கரையை நோக்கி படையெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -