கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட அரச பாடசாலைகளில் கிருமி நாசினி தெளிப்பது பற்றிய பயிற்சி் செயலமர்வு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் இன்று காலை வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜித் தலைமையில் நடை பெற்றது.
அரச பாடசாலைகள் மீள திறக்கப்பட்டால் கொரோனா (Covid-19 )தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும், டெங்கு பரவாமல் தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றியும் விழிப்புணர்வினைவூட்டுவதாக இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
கிருமி நாசினி தெளி கருவி (Sprayer) பயன்படுத்தும் செயன் முறை பயிற்சியினை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.கே.எம்.தாரீக் வளவாளராக கலந்து கொண்டு தெளிவு படுத்தினார்.
இப் பயிற்சி செயலமர்வில் கிண்ணியா வலயத்திக்குட் பட்ட 66 பாடசாலைகளின் உத்தியோகத்தர்கள் இருவர் வீதம் கலந்து கொண்டனர்.
கிண்ணியா வலயக் கல்விப் அலுவலக அதிபர் சங்கத்திக்கு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் இதன் போது நன்றி தெரிவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.