கிருமி நாசினி தெளிப்பது பற்றிய பயிற்சி செயலமர்வு


எம்.ஏ.முகமட்-
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட அரச பாடசாலைகளில் கிருமி நாசினி தெளிப்பது பற்றிய பயிற்சி் செயலமர்வு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் இன்று காலை வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜித் தலைமையில் நடை பெற்றது.

அரச பாடசாலைகள் மீள திறக்கப்பட்டால் கொரோனா (Covid-19 )தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும், டெங்கு பரவாமல் தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றியும் விழிப்புணர்வினைவூட்டுவதாக இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
கிருமி நாசினி தெளி கருவி (Sprayer) பயன்படுத்தும் செயன் முறை பயிற்சியினை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.கே.எம்.தாரீக் வளவாளராக கலந்து கொண்டு தெளிவு படுத்தினார்.

இப் பயிற்சி செயலமர்வில் கிண்ணியா வலயத்திக்குட் பட்ட 66 பாடசாலைகளின் உத்தியோகத்தர்கள் இருவர் வீதம் கலந்து கொண்டனர்.

கிண்ணியா வலயக் கல்விப் அலுவலக அதிபர் சங்கத்திக்கு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் இதன் போது நன்றி தெரிவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -