கந்தளாயில் கொரொனா தொற்றியதையடுத்து கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மும்முரம்


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ரஜஎல பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரொனா வைரஸ் ஏற்பட்டதையடுத்து கந்தளாயில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இன்று(1) நடைபெற்று வருகின்றன.
கந்தளாய் நகர்,சந்தைக்கட்டிடம் மற்றும் பஸ் நிலையம் மற்றும் கொரொனா தொற்றுக்குள்ளானவர் நடமாடிய இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினிகள் விசிரப்பட்டு வருகின்றன.
கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை கொரொனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணி வந்த ஒன்பது குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு,இரண்டு கடைகளுக்கும் சீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.சமன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -