கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளின் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம்


எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்த (14) செவ்வாய்க்கிழமை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளின் ஜனாஸாக்கள் இன்று (17) வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்பட்டைக்கப்பட்டு, ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசித்து வந்த அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளுமே தந்தையால் கடந்த செவ்வாய்கிழமை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டனர்.
உயிரிழந்த தினம் இருவரது உடல்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -