கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் வலியுறுத்து
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியும் அரசதரப்பும் பெற்றுக் கொண்ட நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகவே விரைந்து தேர்தலை நடத்தும் அரசின் முஸ்தீபுகள் அமைகின்றன. எனவே தேர்தலை விரைந்து நடத்தும் எண்ணத்தை உடனே கைவிட்டு, கொரேனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து வழிநடத்தவேண்டும். தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தேர்தல் காரணமாகத் தளர்த்தப்படுமானால் கொரோனா தொற்று அதிகம் பரவும்; அபாயம் ஏற்படும்.. இன்றைய நிலையில் மக்களது தமது அன்றாடா உணவை பெற்றுக் கொள்வதில் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வலுக்கட்டாயமாக ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் அதில் மிகக் குறைவான மக்களே வாக்களிக்க முன்வருவர். இது ஒரு ஜனநாயக மரபுகளை கொண்ட தேர்தலாக அமையாது, எனவே இந்த நடைமுறையை கைவிட வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்துகின்றாhர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.
இதுவிடயம் குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
உயிரிழப்புகளால் உலகமே முடங்கியிருக்கின்ற தருனத்தில் செய்வது அறியாது பேரரசுகளை கலங்கி போயிருக்கும் நிலையில் நாம் மட்டும் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் கொள்வது சாலச்சிறந்தது ஆகாது.
ஏன் இந்த அவசரம் அரசுக்கு எழுந்துள்ளது என்பது தற்போது கேள்விக்குரிய ஒன்றாகவும் உள்ளது. தமது வெற்றி இலக்கை நோக்க கொண்டே அரசு தேர்தலை நடத்த முற்படுகின்றது என்ற ஐயம் எழுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.
இன்றைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் அது ஒருபக்கசார்பான தேர்தலாகவே அமையும். அரச இயந்திரங்கள்யாவும் அரசின் கட்டுப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு செயற்படும் அபாயமும் ஏற்படலாம். இது தேர்தல் குறித்த ஜனநாயகப் பாரம்பரியங் களை சின்னபின்னமாக்கும் வழிமுறை என்பதும் நோக்கத்தக்கது.
எனவே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் எண்ணத்தை கைவிடவேண்டும். இது குறித்த தனது நிலைப்பாட்டை ஸ்ரீல.முஸ்லிம்காங்கிரஸ் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் தெளிவாக தெரிவித்துள்ளது. எமது நிலைப்பாடு போன்றே ஏனைய அரசியல் கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் இக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார்.
எனவே துரிதமாகத் தேர்தலை நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டு கொரானாவை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தும் வேலைத் திட்டங்களைவிரைந்து மேற்கொண்டு மக்களை இயல்புநிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - என்றுள்ளது.
