மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக முகக்கவசம் வழங்கல்...



எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பினால் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் வாழைச்சேனை பொது மைதானத்திலும், ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திலும் இயங்கி வரும் சந்தைக்கு வரும் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் இன்று வியாழக்கிழமை வழங்கி வைத்தனர்.

இதில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வர்த்தக சங்கத்தினர், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின்; நிருவாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சந்தைக்கு வரும் மக்கள் முகச்கவசம் அணியாது வருபவர்களின் பாதுகாப்பு கருதி முகச்கவசம் மற்றும் கொரோணா நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு கொரோணா நோயில் இருந்து மக்களையும், பிரதேசத்தினையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது தொடர்பிலான சுவரொட்டிகளும் பொது இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -