இலங்கையில் கொரோனா - நோயாளர்களின் எண்ணிக்கை 238


லங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (2020.04.15) கொரோனா வைரசு நோயாளிகளில் உறுதி செய்யப்பட்ட 5 நோயாளர்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.
நேற்றைய தினம் பதிவான 5 நோயாளர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் ஆவதுடன் இவர்களில்

இருவர் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளங் காணப்பட்டார்கள்.

மற்ற நோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவராவார் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -