' சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ' மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் - 2020 ஆரம்பித்து வைப்பு .


காரைதீவு நிருபர் சகா-
நாடுபூராகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ' சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ' சமுர்த்தி மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் -2020 களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் 20 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நிர்வாக உத்தியோகத்தர் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் கருத்திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -