நுவரெலியா மாவட்ட பொது ஜன பெரமுன வேட்பாளர் முத்தையா பிரபாகரன்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- கொரோ வைரஸ் இன்று உலக ரீதியாக பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கையிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு பொருளாதார ரீதியிலும் பெரிதாகவே காணப்படுகின்றது.
கடந்த ஒரு மாத காலமாக முழு நாடே முடங்கி கிடக்கின்றது. இந்நிலையில் அரசாங்கம் இந்த கட்டுப்படுத்த எடுத்துள்ள முயற்சி வரவேட்கத்தக்கது. இன்று மக்களின் பிரச்சியினை கருத்தில் கொண்டு அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பகவினை அதிகமானவர்களுக்கு கொடுத்திருக்கிறது ஆனாலும் இந்த 5000 கொடுப்பனவினால் மக்களின் வாழ்க்ககையினை வழமைக்கு கொண்டுவர முடியாது.
இவ்வாறு வழமைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் மாற்று திட்டங்கள் அராசாங்கம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நுவரெலியா மவாட்ட பொது பெரமுனவின் வேட்பாளரான முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.
இன்று (22) நுவரெலியாவில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ...
மலையகத்தை பொருத்தவரையில் மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள.; சிலர் தேயிலை தொழிலில் ஈடுபடுகிறார.; இன்னும் சிலர் விவசாயம் செய்கிறார்கள்.பலர், சுற்றுலா தொழிலிலும் கூலித்தொழிலும் ஈடுபடுகிறார்கள்;,வர்த்தகத்தில் ஈடுபடுகிறார். அவ்வாறு இருக்கும் போது இந்த 5000 ரூபா கொடுப்பனவின் மூலம் அவரகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது.
ஆகவே அவர்களின் வாழ்க்கையினை வழமைக்கு கொண்டுவரப்பட வேண்டும் .எதிர்காலத்திலும் நாடு முடங்கி கிடக்குமானால் இதற்கு தீர்வு வராது ஏனென்றால் கொரானா வைரஸஸூக்கு இது வரை உலகில் எங்கேயும் மறந்து கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்பிரச்சினை இப்போதைக்கு நிறைவுக்கு வராத ஒரு நிலையே காணப்படுகின்றன.
ஆகவே நாம் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம்,ஆகவே தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும்.தற்போது தங்களுடைய தொழில்களை செய்ய முடியாதவர்களுக்கு மாற்றுத்தொழில்களை ஆரம்பிக்க வேண்டும.; அப்படி இல்லா விட்டால் அரசாங்த்திற்கு பாரிய அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்படும்.இதே நேரம் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 திகதி வைத்திருக்கிறார்கள். இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்த திட்டங்கள் வெற்றியளிக்க வேண்டும் என்றால் அரசாங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவாக அமைய வேண்டும். அதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவானவர்களை அதாவது ஜனாதிக்கு உருதுணையாக இருக்கக்கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும்.அதே நேரம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் ஆயிரம் ரூபா தருவதாக தெரிவித்த போதிலும் இன்றுள்ள கொரோனா பிரச்சினை காரணமாக அது கொடுக்க கூடிய நிலை இருக்குமோ என்பது தெரியாது எனினும் தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. என்றுதான் கூற வேண்டும்.
இன்று 5000 கொடுப்பனவு என்பது முழுமையான கொடுப்பனவு என்று கூற முடியாது ஆனால் அரசாங்கம் இன்றுள்ள நிலையில் இதனை செய்வது பெரிய விடயம் என்று தான் கூறவேண்டும்.இன்று ஒரு சிலருக்கு இந்த நிவாரணங்கள் போய் சேரவில்லை என்று சொல்வது தொடர்பாகவும் அரசியல் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. என்பது தொடர்பாகவும் நாங்கள் கண்காணித்து கொண்டு இருக்கிறோம.; இதனை அரசாங்க அதிபர் கவனத்திற்கும் ஜனாதிபதியின் கவனத்திற்கும். கொண்டு வந்துள்ளோம்.இன்று தேர்தல் நடத்த கூடாது என்று சொல்வது என்னை பொருத்தமட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று ஒருசில நாடுகளில் தேர்தல் நடந்தேறியுள்ளது. அத்தோடு இங்கு தேர்தல் நடந்து பாராளுமன்றம் உருவானால் தான் எதிர்கால வேலைகளை திட்டமிட்டு செயப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.