ஹொங்கொங்கில் மனிதனிடம் இருந்து நாய்க்கு பரவிய கொரோனா.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ஹொங்கொங்கில் ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மனிதனிலிருந்து விலங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 60 வயது பெண்ணுக்கு குறைந்தளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது வைத்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது செல்லப்பிராணியான பொமரேனியன் (Pomeranian) நாயை வைத்தியர்கள் பரிசோதனை செய்தனர்.

இதில் அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு மிக ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. ஆனால் கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் அந்த நாயிடம் வெளிப்படையாக தென்படவில்லை. இதைத் தொடர்ந்து அந்த நாய் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கியதும் அதை உரியவரிடம் ஒப்படைக்க வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -