ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுத் தருவோம் - இலங்கை ஆசிரியர் சங்கம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
சிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடு போன்றவைகள் தொடர்பாக விளக்கமளிக்க இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் (05) வியாழக்கிழமை ஓட்டமாவடி பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களை சந்தித்துப் பேசிய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், எதிர்காலத்தில் ஆசிரியர்களின் அனைத்துவிதமான கோரிக்கைகளையும் சட்டரீதியா பெற்றுக்கொள்ள பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், உப தலைவர் எம்.சமீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -