நாட்டுக்கும் வீட்டுக்கும் உர மூற்றிய சிரேஸ்ட்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வும் பொங்கல் விழாவும் நேற்று கொட்டகலை பகுதியில் இடம்பெற்றது.
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. டிவிசன் சிரேஸ்ட்ட பிரஜைகள் கழகம் இவ்விழாவினை நேற்று (15) திகதி ஒழுங்கு செய்திருந்தன.
இவ்விழாவில் இப்பிரஜைகளை வலுவூட்டி அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இதன் போது தைப்பொங்கல் விழா நடைபெற்றதுடன் எம் மத்தியில் அறுகிப் போய்வரும் கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் வயதான போதிலும் எதனையும் சாதிக்க முடியும் என்ற உணர்வினை வெளிப்படுத்தும் வகையில்; அவர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகள்,தோட்ட இளைஞர்கள் ஆகியோர் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வுக்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. டிவிசன் சிரேஸ்ட்ட பிரஜைகள் கழகம் இவ்விழாவினை நேற்று (15) திகதி ஒழுங்கு செய்திருந்தன.
இவ்விழாவில் இப்பிரஜைகளை வலுவூட்டி அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இதன் போது தைப்பொங்கல் விழா நடைபெற்றதுடன் எம் மத்தியில் அறுகிப் போய்வரும் கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் வயதான போதிலும் எதனையும் சாதிக்க முடியும் என்ற உணர்வினை வெளிப்படுத்தும் வகையில்; அவர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகள்,தோட்ட இளைஞர்கள் ஆகியோர் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வுக்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்