பிறைந்துரைச்சேனையில் திருடன் கைவரிசை


SIM.நிப்றாஸ்-
கடந்த 31.12.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 2.00 மணியளவில் வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை அசன்பாவா வீதியிலுள்ள வீட்டின் கூரையைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கிய திருடன் வீட்டிலுள்ளவர்களை கத்தியைக்காட்டி மிரட்டி நகைகள்,பணம் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார்.
திருடன் முகமூடி, கையுறை அணிந்து குறிப்பிட்ட திருட்டை மேற்கொண்டுள்ளான்.
பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸில் நேற்று காலை முறைப்பாடு செய்துள்ளனர்.
வீடுகளில் இரவு நேரங்களில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
அதே நேரம் இப்பிரதேசங்களில் இடம்பெற்று வரும் திருட்டை கட்டுப்படுத்த பாதுகாப்புத்தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -