ஜனவரி 6 முதல் முட்டை விலை அதிகரிப்பு...

ஐ. ஏ. காதிர் கான்-
முட்டைக்கான மொத்த விலை, ஜனவரி 6 ஆம் திகதி முதல் 1.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கோழிக்கான உணவு மற்றும் சோளத்தின் விலை அதிகரித்துள்ளமையால், இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. 

வற் வரி உட்பட பல வரிகளை அரசாங்கம் குறைத்துள்ள போதிலும், அத்தியாவசியப் பொருட்கள் முதல் எவ்வித உணவுப் பொருட்களின் விலைகளும் இதுவரையிலும் குறைவடையவில்லை. 

இந்நிலையில், ஜனவரி 6 ஆம் திகதி முதல் முட்டையொன்றின் மொத்த விலை 1.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், விலை அதிகரிப்பின் பின் 18 ரூபா 50 சதத்திற்கு விற்கப்படுமென்றும், அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கோழிகளுக்குச் சோளகமே பிரதான உணவாக வழங்கப்படுகிறது. வரி வகைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், சோளகத்தின் விலை அதிகரித்துள்ளது. சோளகத்தின் விலை உயர்வடைந்துள்ளதால், இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -