கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்

ஐ. ஏ. காதிர் கான்-

கொரோனா வைரஸ் தொடர்பில் முகம்கொடுக்குமுகமாக, அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கியதாக, 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேசிய தொற்று நோய் வைத்தியசாலை (IDH), கொழும்பு வடக்கு, கம்பஹா, இரத்தினபுரி, பதுளை, கராப்பிட்டிய உள்ளிட்ட 12 மருத்துவமனைகள் இதற்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பாடசாலைகளைத் தெளிவுபடுத்தும் வகையிலான, துண்டுப்பிரசுரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வியமைச்சினால் சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -