கொரோனா வைரஸ் தொடர்பில் முகம்கொடுக்குமுகமாக, அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கியதாக, 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தேசிய தொற்று நோய் வைத்தியசாலை (IDH), கொழும்பு வடக்கு, கம்பஹா, இரத்தினபுரி, பதுளை, கராப்பிட்டிய உள்ளிட்ட 12 மருத்துவமனைகள் இதற்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பாடசாலைகளைத் தெளிவுபடுத்தும் வகையிலான, துண்டுப்பிரசுரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வியமைச்சினால் சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.