கலைச்சுடர் விருது வழங்கி கௌரவிப்பு


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்றபோது பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி , பிரதி அதிபரும் சமாதான நீதவானுமாகிய கலாநிதி நாராயணபிள்ளை நாகேந்திரன் அவரின் தொடர்ச்சியான கலைப்பணியை பாராட்டி ” கலைச்சுடர் ”விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இவரின் சமூக , கலை , கல்வி , சமய ரீதியிலான பல்வேறு சேவைகளை பாராட்டி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் பத்திற்கும் மேற்பட்ட கௌரவிப்பு பட்டங்களை அண்மைக்காலத்தில் தமதாக்கிக் கொண்டவர்.அத்துடன் தேசிய கல்வி நிறுவன கல்விமாணி கற்கை நெறியின் பிராந்திய நிலைய விரிவுரையாளராகவும் பணியாற்றியதுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் புதிய பாட நூலாக்கல் பணியின் எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -