முஹம்மட் கைஸான் உயிரியல் விஞ்ஞானத்துறையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் முஹம்மட் அமீன் முஹம்மட் கைஸான் உயிரியல் விஞ்ஞானத்துறையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தியான ” ஏ ” சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதன்னிலையும் தேசிய ரீதியில் 132 வது இடத்தினையும் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளார்.அத்துடன் பொது ஆங்கிலத்திலும் ” ஏ ” சித்தியினை பெற்றுள்ளார்.கல்முனையைச் சேர்ந்த டொக்டர் எம்.ஏ.சி.எம்.அமீன் , டொக்டர் நிஜாமியா அமீன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.இவ்விரண்டு வைத்தியர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர்களாகும். அத்துடன் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இருந்து முதன் முதலாக வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் வைத்தியர் என்ற பெருமையையும் இவரின் தாய் நிஜாமியா அமீன் பெற்றுக் கொண்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -