பங்களாதேஷ் உயர் அறிஞர்கள் மாநாட்டில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா பங்கேற்பு


அஸ்லம் எஸ்.மௌலானா-
ம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) பங்களாதேஷ் பயணமானார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற சமாதானத்திற்கான சமயங்களின் சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் நகரில் நாளை புதன்கிழமை 20ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 22ஆம் திகதி வரை மூன்று தினங்கள் இடம்பெறவுள்ள சர்வதேச சமயங்களின் உயர் அறிஞர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே இவர் அங்கு விஜயம் செய்துள்ளார்.

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவராகவும் வேறு பல சிவில் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தராகவும் இருந்து சமூக, கல்வி, கலாசார மற்றும் சமாதானப் பணிகளில் முன்னின்று உழைத்து வருகின்றார்.

கடந்த காலங்களில் ஜப்பான், நோர்வே, ஜேர்மன், தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஓஸ்திரியா, தென் கொரியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இடம்பெற்ற சமயம் மற்றும் சமாதானம் தொடர்பிலான மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளில் இவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -