புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பிரதான மகளிர் தேர்தல் கிளைக் காரியாலயம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நஷ்ரீன் முர்ஷித் தலைமையில் (05) செவ்வாய்க்கிழமை அவரது சாய்ந்தமருது 19ம் வட்டாரத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆரீக்கா காரியப்பர், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஷரீபா, முன்னாள் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.