சாய்ந்தமருதில் சஜித் பிரேமதாசவின் பிரதான மகளிர் தேர்தல் அலுவலகம் திறப்பு.!

எஸ்.அஷ்ரப்கான்-
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பிரதான மகளிர் தேர்தல் கிளைக் காரியாலயம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நஷ்ரீன் முர்ஷித் தலைமையில் (05) செவ்வாய்க்கிழமை அவரது சாய்ந்தமருது 19ம் வட்டாரத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆரீக்கா காரியப்பர், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஷரீபா, முன்னாள் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -