ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் வாழைச்சேனை ஹைராத் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-,
பொட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கி வைத்திருந்தது போன்று சஹ்றானுக்கும் சம்பளம் கொடுத்து வைத்திருந்தோம் என மகிந்தவின் ஊடக பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். எந்த தேவைக்காக சஹ்றானை எடுத்து வைத்திருந்தீர்கள்.
வர விருக்கின்ற ஜனாதிபதி தேர்லுக்கு முன்பாக குண்டு வெடிக்கப்பட வேண்டும். அதன் கொலைக் களத்திற்கு போனவர் தான் சஹ்றானே தவிர அவரொரு பயங்கரவாதியாக நான் கண்டு கொள்ளவில்லை. அரச புலனாய்வின் கொந்தராத்து காரனாக இந்த செயலை செய்துள்ளார். இந்த நாட்டில் பதினொராயிரம் பேர் இராணுவ புலனாய்வில் உள்ளார்கள். 119 தடவை சஹ்றானுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. அவரை பிடிக்கவில்லை.
நாங்கள் இங்கு ஏதும் பிரச்சினை என்றால் எத்தனை தடவை பொலிஸ் மற்றும் புலனாய்வினர் தேடி வருவார்கள். ஆனால் சஹ்றானை தேடவில்லை. ஏனெனில் சஹ்றான் அவர்களுடைய காவலில் இருந்தமையால் தேடி பிடிக்க முடியாமல் போனது. நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தினார்கள்.
இந்த தேர்தலில் அவர்கள் அமைத்த வியூகம். தேர்தலில் வெல்வதாக இருந்தால் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அவர்களை தள்ளி வைப்பதற்கான தந்திேராபாயம் வேண்டும். தமிழ், கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தினை பிரிப்பதற்காக திட்டமிட்ட சதி. அதைத்தான் மகேஸ் சேனநாயக்க சொல்கின்றார்.
கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளர் என்றவுடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த நிகழ்வு அதுதான். சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமித்தமை அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய தலையிடி. ஒரு குடும்ப ஆட்சியில் இருந்து தான் வர வேண்டும் என்கின்ற நிலவரம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
அனைத்து ராஜபக்ஷக்களும் சேர்ந்து தான் எமது சமூகத்திற்கு அநியாயத்தை செய்துள்ளனர். மகிந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் ஆதரவு வழங்கிய போது நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதில் செயல்பட்டார்கள்.
கோட்டாபய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லை என தெளிவாக கூறியுள்ளார். இவ்வாறு கூறியதற்கு பிற்பாடு சூடு சொறனை உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் அதைவிட கேவலம் எதுவும் இல்லை.
இந்த ஜனாதிபதி தேர்தல் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்குமான தேர்தல். நாங்கள் அனைவரும் ஒப்பாரி வைக்காமல் இருப்பதற்கு, எங்களது பள்ளிவாசல்களை பாதுகாப்பதற்கு, எங்களது கலாசார உடைகளை, அடையாளத்தை பாதுகாப்பதற்கான தேர்தல் என்பதை அனைவரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகம் தெளிவான பார்வையோடு இருக்கின்ற சமூகம். எனவே அன்னத்திற்கு மாத்திரம் வாக்களிப்பதே உங்களுடைய கடமை என்றார்.