கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார். இதன்போது கூட்டு எதிரணி எதிர்காலத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
அதேபோல் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் முதலாவது கூட்டமாக இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -