காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்


காலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்டம் நிவித்­தி­கல – கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் மீது நேற்று முன்தினமும் நேற்றும் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்­களைக் கொண்டு தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது, குறித்த பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் கூறினார்,ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16 ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரி­வுக்­குட்­ பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்­தப்பட்­டுள்­ளது. இந்­நி­லையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில், அடை­யாளம் தெரி­யாத நபர் ஒரு­வரால் இந்த தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.
நேற்று மாலை வரை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது­கு­றித்த விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்­லை­யென பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்குத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.
இத­னி­டையே நேற்று இரத்­தி­ன­புரி மாவட்டம், நிவித்­தி­கல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகு­தியில் பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வந்­த­வர்கள் இந்த தாக்­கு­தலை நடாத்­தி­யுள்­ள­தா­கவும், இதன்­போது பள்­ளி­வா­சலின் கண்­ணா­டி­க­ளுக்கு சேத­மேற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர்.
இந்­நி­லையில் இந்த சம்­பவம் குறித்து நிவித்­தி­கல பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்த நிலையில் நேற்று சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­லி­களை மையப்­ப­டுத்தி முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் முச்­சக்­கர வண்­டியில் அவ்­வி­ரு­வரும் வந்து தாக்­குதல் நடாத்­து­வது வெளிப்­ப­டுத்­தப்­பட்டதால் அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் கூறினர். நிவித்­தி­கல -– கல­வான வீதி­யி­லுள்ள குறித்த கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடாத்­திய குற்­றச்­சாட்டில் கைதான இரு­வரில் ஒருவர் நிவித்திலகவில் மோட்டார் வாகன திருத்துநர் என பொலிஸார் கூறினர். சந்தேக நபர்கள் இருவரும் நிவித்திகல -– தொரகொல்ல மற்றும் உடகரவிட்ட – – பின்கந்தவத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரென பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.-Vidivelli
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -