சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபட்டுள்ளன.
புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தபோராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று (08.10.2019) முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவையில் மலையகத்தில் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பயணஞ் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.
மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் திறக்கப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.