தாய் , தகப்பன் மற்றும் ஆசிரியர் ஆகிய மூன்று உறுதியான அத்திவாரம்தான் ஒரு மாணவனின் உயர்வாகும்! -சமாதான நீதிவான் சலீம் றமீஸ்-

ரு மாணவனின் உயர்வு தாய் , தகப்பன் மற்றும் ஆசிரியர் ஆகிய மூன்று பேரிலும் தங்கியுள்ளது. இந்த மூன்றும் சேர்ந்த உறுதியான அத்திவாரம்தான் ஒரு மாணவனின் உயர்வுக்கு காரணமாக அமைகின்றது என அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சமாதான நீதிவான் சலீம் றமீஸ் தெரிவித்தார்.
ட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் ஆசிரியர்
தின விழா சிரேஷ்ட மாணவர் எம்.ஜே.எம். சக்கி தலைமையில் (07) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சலீம் றமீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், ஆசிரியர் பணி மிகவும் புனிதமானதும் கௌரவமானதுமாகும். இதனை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுபோன்றுதான் கல்விக்காக பணி செய்கின்ற ஆசிரியர்
களையும் நாம் வாழ்நாள் முழுவது மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும்.
ஆசிரியர் பணி வேறு பதவிகள் போன்றல்ல. எந்த நேரமும் மாணவர்களின் கல்வி தொடர்பான சிந்தனைகளிலே இருப்பார்கள். தனது மாணவர் கல்வியிலும், ஏனைய விடயங்களிலும் உயர வேண்டும் என்றே சிந்திப்பார்கள். கல்வி விடயத்தில் யார் களவு செய்கின்றார்களோ அவ்வாறானவர்களை இறைவன் பார்த்துக் கொள்வான்.
எனவே, ஆசிரியர்களை மாணவர்கள் மாத்திரமல்ல பெற்றோர்களும் ஏனையோர்ககளும் மதிக்கின்ற தன்மை ஏற்படவேண்டும் எனவும் சலீம் றமீஸ் மேலும் தெரிவித்தார்.
இங்கு மாணவர்களினதும்,ஆசிரியர்களினதும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாடசாலை இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ், அதிபர் ஏ.எம்.எம். இத்ரீஸ், பிரதி அதிபர் ஓ.எல்.எம்.றிஸ்வான் உட்பட ஆசிரயர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -