இன்றைய அரசியல் கலாசாரம் காரணமாக சட்டத்தின் ஆதிக்கம் தொடர்பான வியூகங்கள் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியான ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சி (சனிக்கிழமை) சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு நடத்தியது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இன்று எமது நாட்டில் பண பலமும், அதிகாரமும் உள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும், வறிய மற்றும் பலவீனமான தரப்பினருக்கு வேறு விதமாகவும் சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது.
நாம் சரியாக சட்டத்தின் ஆதிகத்தையும், அதன் வியூகங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் பணம், அதிகாரம், வறுமை, பலவீனம் என்று பாராமல் அனைவருக்கும் சமனான வகையில் சட்டத்தை பிரயோகிக்க வேண்டும்.
அதனை நாங்கள் இந்த நாட்டில் நிச்சயமாக உருவாக்குவோம். அடுத்து எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இரண்டு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன.
ஒன்று உள்ளக ரீதியாக எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக சர்வதேச ரீதியாக உள்ள போட்டிகள் மற்றும் அழுத்தங்களை சமாளிக்கக் கூடிய வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும்” என அவர் குறிப்பிட்டார்.