திருகோணமலை நகர சபைக்குட்பட்ட மூன்றாம் கட்டை டிப்போ வீதியை இணைக்கும் குறுக்கு வீதியானது பயணம் செய்ய முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக காணப்படுவதாக விசனம்.


எப்.முபாரக் -
திருகோணமலை நகர சபைக்குட்பட்ட மூன்றாம் கட்டை டிப்போ வீதியை இணைக்கும் குறுக்கு வீதியானது பயணம் செய்ய முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்களும் பாடசாலை மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
மழை காலங்காளில் சேரும்,சகதியுமாக காணப்படுவதோடு,நடுவீதியில் சேற்று நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமம்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -