
மேன்முறையிட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (04) காலை 9.30 மணி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இது தொடர்பிலான விசாரணையை நிறைவு செய்யும் பொருட்டு, அனைத்து தரப்பினருக்கும் இன்று பிற்பகல் 3.15 வரை கால அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.
இலங்கை குடிமகனாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை அங்கீகரிப்பதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு இன்று பிற்பகல் 6.00 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது