கிண்ணியாவில் வியாழக் கிழமை (24)இடம் பெற்ற கூட்டமொன்றின் போதே இவ்வாறு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் ஆகியோர்களின் முன்னிலையில் வைத்து உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்...
இவர் ஐக்கிய தேசிய கட்சியில் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளதோடு கட்சியின் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்..
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப்,இராஜாங்க அமைச்சரும் தவிசாளருமான அமீர் அலி,கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்,திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.