இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்கள் 401 பேர் புலமைப் பரிசில் பெற தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று கோட்டங்களிலும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய அதிபர்களுக்கும், ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்களுக்கும் மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் போன்றோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.