கல்முனை மாநகர சபை முதல்வருக்கு கௌரவமளிப்பு



பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி AM. றகீபிற்கு “தாறுஸ்ஸபா” அமைய நிர்வாகிகள் கௌரவித்தனர்.
தாறுஸ்ஸபாஅமையத்திற்கு சனிக்கிழமை(14) விஜயம் செய்த முதல்வரை அமைப்பின் நிர்வாகிகள் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் அவர்களுடன் பிராந்திய அபிவிருத்தி சமூக உரிமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
மேலும் தாறுஸ்ஸபா அமையம் அமைந்திருக்கின்ற கல்முனை மத்றஸா வீதி முதலாம் குறுக்கில் மின்விளக்கற்ற நிலை காண்பிக்கப்பட்டது. அதற்கான தீர்வை உடனடியாக செய்து தருவதாக முதல்வரால் வாக்குறுதியளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தாறுஸ்ஸபா அமைப்பின் தவிசாளர் உஸ்தாத் சபா முஹம்மத், சிரேஷ்ட ஊடகவியலாளர் AJM. சமீம், பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் AL. நயீம் , மருந்தகர் அல்ஹாஜ் AL. ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -