ஓட்டமாவடி தியாவட்டவான் ஆற்றில் வீழ்ந்து ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி - காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த முகைதீன் பாவா இஸ்ஸதீன் (54) வயது என்பவரே இவ்வாறு மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாக இன்று (26) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்த பின்னர்தான் இவர் ஆற்றில் குதித்துள்ளார் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஆற்றில் வீழ்ந்து மரணித்தவரை ஆற்றில் போடப்பட்டுள்ள கொடுவா மீன் கூட்டில் சிக்கிய நிலையில் மீட்புப் பணியினர் மீட்டுள்ளனர்.
மரணமடைந்தவரின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.