ஆற்றில் வீழ்ந்து மரணித்த ஓட்டமாவடி இஸ்ஸதீன்: தற்கொலையென சந்தேகம்..!

எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டமாவடி தியாவட்டவான் ஆற்றில் வீழ்ந்து ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி - காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த முகைதீன் பாவா இஸ்ஸதீன் (54) வயது என்பவரே இவ்வாறு மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாக இன்று (26) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்த பின்னர்தான் இவர் ஆற்றில் குதித்துள்ளார் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஆற்றில் வீழ்ந்து மரணித்தவரை ஆற்றில் போடப்பட்டுள்ள கொடுவா மீன் கூட்டில் சிக்கிய நிலையில் மீட்புப் பணியினர் மீட்டுள்ளனர்.

மரணமடைந்தவரின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -