காரைதீவு நிருபர் சகா-
ஆழ்கடலுக்குச் சென்ற தமது தந்தை கடந்த பத்து நாட்களாக வீடு திரும்பாத காரணத்தினால் மனைவி உட்பட நான்கு குழந்தைகளும் பரிதவிக்கின்றனர்.
இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 18ஆம் திகதி காரைதீவு மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக் இயந்திரப்படகில் சென்ற சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன்(வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) ஆகிய மூவரே இவ்விதம் கடலில் மாயமானவர்களாவர்.
அவர்கள பத்து நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்கள் என்னவானார்கள் என்றுகூடத்தெரிவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி கவலையுடன் வீதிக்கு வந்துள்ளன.
இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 18ஆம் திகதி காரைதீவு மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக் இயந்திரப்படகில் சென்ற சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன்(வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) ஆகிய மூவரே இவ்விதம் கடலில் மாயமானவர்களாவர்.
அவர்கள பத்து நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்கள் என்னவானார்கள் என்றுகூடத்தெரிவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி கவலையுடன் வீதிக்கு வந்துள்ளன.
காரைதீவு 11ஆம் பிரிவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) என்பவரின் குடும்பநிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறியிருக்கிறது. மனைவி மற்றும் 3பெண்பிள்ளைகள் 1ஆண்குழந்தையுடன் பரிதவிக்கிறது அக்குடும்பம்.
இன்றுகாலை அவரது வீட்டுக்குச்சென்று விசாரித்தபோது பின்வரும் தகவல்கள் கிடைத்தன.
அவரது மனைவி சோமசுந்தரம் ஆனந்தமலர்(வயது45) கூறுகையில்:
எனக்கு 4பிள்ளைகள். சதானா(வயது22) உயர்தரம் தோற்றி 2சி1எஸ் பெற்றவர். ஜீவிதா(வயது19) இம்முறை உயர்தரம் தோற்றியவர். காயத்ரீ(வயது17) தற்போது உயர்தரம் கணிதப்பிரிவில் பயின்றுகொண்டிருக்கிறார். கடைக்குட்டி துஷாந்த்(வயது07) இரண்டாம்வகுப்பு கற்கிறார்.
இவர்கள் நால்வருடன் இன்று நான் கண்ணீரில் காலத்தைக்கழிக்கிறேன். எமக்கு எல்லாமே அவர்தான். அவர் கடலுக்குச்சென்று கொண்டுவருவதில்தான் காலத்தைக் கடத்துகிறோம்.பிள்ளைகளின் படிப்புச்செலவும் அதற்குள்தான். அவரில்லாவிடின் நாம்இல்லை.
சம்பவதினம் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2மணியளவில் சாப்பாட்டுப்பார்சலுடன் வீட்டைவிட்டு புறப்பட்டு வழமைபோல சாய்ந்தமருது மீனவர்களுடன் ஆழ்கடலுக்குச்சென்றார்.
மறுநாள் காலை வருவது வழக்கம். அவர் காலையில் வரவில்லை. நான் அவரது முதலாளியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுகேட்டேன். 'இன்னும் வோட் வரவில்லை' என்றார்.
மீண்டும் பகலில் கேட்டேன். அதே பதில் வந்தது. இரவாகியதும் எமக்கு பயம் தொற்றிக்கொண்டது. அழுகை துக்கம் தொண்டையை அடைத்தது.
தொலைபேசி எடுத்துக்கேட்டபோது 'வோட் இன்னும் வரவில்லை. வேறொரு வோட்டை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளேன். பார்ப்போம்' என்றார்.
மறுநாள் எமது உறவினர்கள் அங்கு சென்றார்கள். அவருடன் மேலும் இரண்டு சகோதரமுஸ்லிம் மீனவர்களும் சென்றவர்கள் வரவில்லை என்றுதெரியவந்தது.
பின்பு அவர்கள் பொலிஸ் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள். நாமும் சம்மாந்துறைப்பொலிசில் சென்று முறையிட்டுள்ளோம்.
இன்னும் யாரும் வந்து சேரவில்லை. எந்தச் சாதகமான பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும். எனது குடும்பம் முற்றுமுழுதாக அவரிலேயே தங்கியுள்ளது. என்றார்அழுகையுடன்.
பிரதேசசபையினர் உதவி!
அச்சமயம் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் உறுப்பினர்களான இ.மோகன் மு.காண்டீபன் சி.ஜெயராணி மற்றும் சமுகசேவையாளர் க.தம்பிராசா ஆகியோர் வருகைதந்து குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
காரைதீவு பிரதேசசபைத்தீர்மானத்தின்படி முதற்கட்டமாக 10ஆயிரம் ருபாரை தவிசாளர் ஜெயசிறில் குடும்பத்திடம் கையளித்தார்.
அவர் அங்கு கூறுகையில்:
இச்செய்தி கேள்வியுற்றதும் அறிவிக்கவேண்டிய இடங்களுக்கெல்லாம் அறிவித்தோம். நாமும் விசேடகூட்டமொன்றைக்கூடிய எவ்வாறு நடந்துகொள்வதென்று முடிவெடுத்து முதற்கட்டமாக அன்றாட செலவுகளுக்காக பத்தாயிரம் ருபாவை வழங்குவதென்று ஏகமனதாக தீர்மானித்து இன்று அதனை வழங்கியுள்ளோம்.
இதேபோல் இங்குள்ள ஆலயங்கள் பொதுஅமைப்புகள் காணாமல்போன 3 மீனவர்களையும் தேடுவதற்கும் குடும்பத்திற்கு உதவவும் முன்வரவேண்டும். பொதுமக்களும் பரோபகாரிகளும் இக்குடும்பத்திற்கு உதவவேண்டும்.
இதுவரை காணாமல்போன மீனவர்களையும் படகினையும் தேடி பலமுயற்சிகளைசகோதரர்கள் சுமார் ஏழரை லட்சருபா செலவில் தேடியுள்ளனர். ஆனால் இன்னும் சாதகமான பதில் இல்லையென்று தெரிவிகக்கப்படுகிறது.
நாம் இன்று நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மீன்பிடித்துறை அமைச்சர் ஆளுநர் அரசாங்கஅதிபர் என பலதரப்பினருக்கு அவசர வேண்டுகோளை தகவலை பிரதேசசபையால் அனுப்பியுள்ளோம்.
வெகுவிரைவில் நல்ல சாதகமான தீர்வை இறையுதவியுடன் எதிர்பார்க்கிறோம். ஏனையோரும் அதற்காகப் பிரார்திக்கவேண்டும். என்றார்.
உறுப்பினர் மு.காண்டீபன் கூறுகையில்:
நாம் காரைதீவுப்பிரதேச மீனவர்கள் அனைவரிடமும் இது பற்றிப்பேசி நிதிஅறிவிடுவதற்கான ஏற்பாடுகளைச்செய்துள்ளோம். காணாமல்போன 3உயிர்களைத்தேடுவதற்கும் இக்குடும்பத்திற்கும் இது பயன்படும்.எனவே மீனவர்கள் மட்டுமல்ல யாரும் உதவலாம் என்றார்.