சேருவில பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் யானைக் குட்டியொன்று மீட்பு.


எப்.முபாரக்-
திருகோணமலை சேருவில பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் யானைக் குட்டியொன்று பொது மக்களினால் வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.
யானைக்குட்டி பிறந்து இரண்டு கிழமையான நிலையிலே கைவிடப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற நிலையில் சிலரினால் காட்டில் தனிமையில் கைவிடப்பட்ட யானைக்குட்டியொன்று தத்தளித்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு வனஜீவராசி அதிகாரிகளுக்கு விறகு எடுக்கச் சென்றோரினால் தகவல் வழங்கப்பட்டு வனஜீவராசி அதிகாரிகள் யானைக் குட்டியை கைப்பற்றி கந்தளாய் பிராந்திய அலுவலகத்தினூடாக யால தேசிய சரணாலயத்தில் இன்றைய தினம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -