இஹ்ஸான் சமூக சேவை அமைப்பினால் தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.

எச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடா இஹ்ஸான் சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்த மரக்கன்று வழங்கும் நிகழ்வும், உலக அமைதி தினமும் (27) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஐ.எம். அன்வர் மதனி தலைமையில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான், மயிலங்கரச்சை ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் முஸ்லிம், குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு அங்கு வருகை தந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இன நல்லிணக்கம் தொடர்பான உரைகளும் சர்வமதத் தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் தியாவட்டவான் 210 C கிராம உத்தியோகத்தர் எம்.ஜௌபர், கல்குடா இஹ்ஸான் சமூக சேவைகள் அமைப்பின் பதில் பணிப்பாளர் எம்.ஐ.எம். நவாஸ் மௌலவி சர்வமதத் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -