மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 5 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேற்று அந்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலை நிர்வாகத்துடன் இது தொடர்பான ஆரம்பக்கட்டக் கலந்துரையாடலை மேற்கொண்டார்.அங்கு நிலவும் குறைபாடுகளையும் அவதானித்தார்.
அந்த வைத்தியசாலைக்குத் தேவையான அதிநவீன மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் ஏனைய திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
50 மில்லியன் செலவில் மேற்படி இரண்டு கட்டடங்களும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -