நுவரெலியா கந்தபளை கோட்லோஜ் தோட்ட ஆலயத்தின் சிலைகள் பிரதிஸட்டையும் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன.

ஹட்டன் கே..சுந்தரலிங்கம்- 
நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்ட நான்காம் பிரிவு தேயிலை மலையில் முனி சாமி சிலையும் கருப்பு சாமி சிலையும் பிரதிஷ்டடை செய்யும் வைபவமும் புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்வைபவமும் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில்; கறுப்புச்சாமி,முனுசாமி ஆகிய சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு பால்குட பவனி இடம்பெற்றதுடன் பாலாபிசேகம் நீராபி சேகம் ஆகிய இடம்பெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இதே குறித்த ஆலய பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பௌத்த கொடி நாட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் அமைதியற்ற சூல்நிலை ஏற்பட்டதுடன் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் இ.தோ.காதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான், இதொகா பொதுச் செயலாளர் திருமதி அனுஷா சிவராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி. சக்திவேல்,கனபதிகணகராஜ் , இதொகா பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமாண், நுவரெலியா பிரதேச சபை தலைவர்வேலு யோகராஜ், அக்கரப்பத்தனை, பிரதேசசபை தலைவர் சுப்பிரமணியம் கதீர் செல்வன், நோர்வூட் பிரதேச சபைதலைவர் குழந்தை ரவீ , நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஜெயராம் வினோஜி உட்பட தோட்ட பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -