மூதூர் பதிவாளர் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்


அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் இராயப்பு ஜோமெல் றோய் குரூஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் மன்னார்-வங்காலை பகுதியைச் சேர்ந்த இராயப்பு குரூஸ் மற்றும் செலினம்மா குரூஸ் ஆகியோரின் அன்பு மகனும் ஆவார்.
இவரது சிறந்த சமூக சேவையை கருத்தில் கொண்டு இவருக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது தேசகீர்த்தி பட்டம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -