இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்: சுனாமி பீதியில் பொதுமக்கள்..!


ந்தோனேசியாவில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்: சுனாமி பீதியில் பொதுமக்கள்..!
இந்தோனேசியாவில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியுள்ளது.

Samayam Tamil | Updated:Aug 2, 2019, 08:00PM IST



இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
ஹைலைட்ஸ்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.


இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள தெலுக் பெட்டங் நகரிலிருந்து 225 கி.மீ தொலைவில் 59 கி.மீ ஆழத்தில் இன்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 17 நிமிடம் வரை இந்த நிலநடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக அந்நாட்டில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது அம்மகளை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க இந்தோனேசிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், தொடர்ந்து மக்களின் வெளியேற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும், பொருட்கள் இழப்பு பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறியுள்ளது.
இந்தோனேசியாவின் தற்போதைய நிலநடுக்கம் குறித்த முழு விபரங்களும் சிறிது நேரத்தில் தெரிய வரும் என சொல்லப்பட்டுள்ளது. அதில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருட்கள் சேதம் குறித்த விவரங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -