அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்-மஃறூப் எம்பி


ஹஸ்பர் ஏ ஹலீம்-

"அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல "அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று ஞாயிற்றுக் கிழமை (07)அமான் வீதிக்கான ரண்மாவத்த காபட் இடும் வீதி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்

இங்கு வீதிகளை மாத்திரம் திறந்து விட்டுச் சென்று அபிவிருத்திகளை மாத்திரம் நடை முறைப்படுத்த வரவில்லை.

மாறாக இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக போராடுகிறோம் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்கள், பாதுகாப்பு, வாழ்வாதாரம், காணி போன்ற விடயங்களை இழந்து வாழ்ந்து வருகிறோம்.

பேரினவாதிகளின் அடாவடித்தனங்களுக்கும் அட்டூழியங்களுக்குள்ளும் தள்ளப்பட்டு எமது குரல் வலைகளை நசுக்குகின்ற சதிகாரர்களாக நாட்டு நிலமைகள் படு மோசமாக மாறியிருக்கின்றன.


அன்றைய கால கட்டங்களில் மஹிந்த அரசில் இருந்து முதன் முதலில் வெளியேறிய தலைமை றிசாத் எமது கட்சிதின் தவிசாளர் அமீர் அலி போன்றவர்களே இதன் போது பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டன .

எமது துஆ ஊடாக இரு வருட காலத்திலேயே மஹிந்த அரசின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது இருந்த போதிலும் அதிகூடிய வாக்குகளில் சுமார் இலங்கையில் காணப்படும் 166 தொகுதிகளில் இருந்தும் அதிகமான வாக்குகளை இந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியே அளித்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம் .

ஜனாதிபதி தேர்தலின் போது இரு பாலங்களை அமைத்து தருவதாக வாக்குறுதியளித்திருந்த நிலையில் அது இன்னும் நிறைவேறவில்லை இதனை சவாலாக ஏற்றுக் கொணடு இந்த வருடத்துக்குள் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிப்பேன் பொலன்னறுவையில் பல மில்லியன்களில் செலவு செய்யும் ஜனாதிபதிக்கு பால நிர்மாணத்தை ஏன் செய்ய முடியாது?

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன் சாட்சியமளித்து, அரச புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல விசாரணைகள் ஊடாக இன்று பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இலங்கை நாடாளுமன்றிலே இனவாதிகள் இருக்கிறார்கள் முதலில் இந்த உதயன்கம்மன்பில , அதுரலிய, எஸ்.பி உள்ளிட்ட ஆறு இனவாதிகளை இல்லாதொழிக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகம் சிங்கள பௌத்த மக்களுடன் போராட்டத்தை நடாத்துவதுமில்லை எமது மார்க்கம் ஒற்றுமையை விரும்புகிறது மாறாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள பேரினவாதிகளே இச் செயலில் இறங்கியிருக்கிறார்கள் ஆட்சி அதிகாரம் அரசியல் யாப்புக்கு முரணாக நாங்கள் செயற்பட்டதில்லை வீணாண புறளிகளை கிளப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டு பண்ணுவதையோ பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்தவர்களை விடுவியுங்கள் என மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறோம் அன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதம் இருப்பதற்கு இந்த அவசரகால சட்டத்தின் போது அனுமதி அளித்தவர்கள் யார் ?

திருகோணமலையில் உள்ள ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதும் அபிவிருத்தி என்பது முக்கியமல்ல அதை விடவும் கூடுதலான சேவைகளை இந்த மாவட்டத்துக்கு செய்திருக்கிறேன் கடந்த வருடத்தில் 365 மில்லியன்களும் இந்த வருடத்தில் அதை விட கூடுதலான தொகைகளை கொண்டும் திருகோணமலை அபிவிருத்தியடையவுள்ளது கிண்ணியாவில் 16 வட்டாரங்களில் 36 கோடி ரூபா செலவில் அபிவிருத்திகளை செய்திருக்கிறோம் இருந்த போதிலும் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை ஒரு போதும் விட்டுக் கொடுக்க தயங்கமாட்டோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -