சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்குச் சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளுநர் முஸம்மில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்களிடம் சர்வதேச இஸ்லாமிய மாநாடு குறித்து அறிவிப்பதற்காகவே, (14) சனிக்கிழமையன்று ஆளுநர் முஸம்மில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்றிருந்ததாகத் தெரியவருகிறது.
இம்மாத இறுதியில், சர்வதேச இன நல்லுறவுக்கான இஸ்லாமிய மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி தலதா மாளிகைக்குச் சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளுநர் முஸம்மில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்களிடம் சர்வதேச இஸ்லாமிய மாநாடு குறித்து அறிவிப்பதற்காகவே, (14) சனிக்கிழமையன்று ஆளுநர் முஸம்மில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்றிருந்ததாகத் தெரியவருகிறது.
இம்மாத இறுதியில், சர்வதேச இன நல்லுறவுக்கான இஸ்லாமிய மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.