பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் சான்றுள்ள இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அது அமைந்துள்ள இடத்துக்கு கோகிலா ரமணி என்ற பெண் உரிமை கோரியுள்ளார். அத்துடன் இராவண சேனை என்ற அமைப்பும் இன்னொரு அமைப்பும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இன முறுகல் நிலையை ஏற்படுத்தினர்.
நான் அம்மாவட்ட எம்.பி.என்ற அடிப்படையில் கன்னியா வெந்நீரூற்று விடயத்தில் தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறினேன். இதனையடுத்து நான் இனமோதலையும் இனவாதத்தையும் தூண்டுவதாக இந்த அமைப்புக்கள் என் மீது குற்றம் சாட்டியுள்ளன. நாம் இம்மாவட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் பெற்றவன் என்ற அடிப்படையில் இது எனது சிறப்புரிமையை மீறுவதாகவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் ஒரு குழப்ப நிலையை அப் பகுதியில் ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் செயற்பாடு திருகோணமலையில் இன மோதலை ஏற்படுத்தினால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிக்கு அழிவையே ஏற்படுத்தும்.
