அத்துடன் காதி நீதிபதிகளாக பெண்களை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் (11) வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்ற போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது உலமாக்களின் அபிப்பிராயம் பெறாமல் இத்தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டமை மூலம் எதிர் காலத்தில் முஸ்லிம் திருமண சட்டம் முற்று முழுதாக இல்லாமல் போவதற்கே வழிவகுத்துள்ளது.
எம்மை பொறுத்தவரை முஸ்லிம் திருமணத்தில் யாரும் கைவைக்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷ அரசில் கூட நிறைவேறாத இத்திருத்தம் முஸ்லிம்களின் 98 வீத வாக்குகளால் கொண்டுவரப்பட்ட ஐ தே த அரசில் நிறைவேறுவது முஸ்லிம் சமூகத்துக்கு இந்த அரசு செய்யும் துரோகமாகும்.