நூருள் ஹுதா உமர்-
மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகளுக்கான வளப்படுத்தல் நிலைய 12ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா ஹியூமன் லிங்க் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல் கானின் தலைமையில் இன்று ஹியூமன் லிங்க் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து கொண்டார். அத்துடன் பல முக்கிய பிரமுகர்களும், விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விளையாட்டு கலாச்சார விழாவில் மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகள் வளப்படுத்தல் நிலையம், காரைதீவு கமு/கமு சண்முகா மகா வித்தியாலயம், அம்/ உஹன கனிஸ்ட வித்தியாலயம் என்பன கலந்து கொண்டன.
விசேட தேவையுடைய தமிழ்,சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர். இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய அவசியம், மாற்று திறனாளிகள் இந்த சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியம், அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி அதிதிகள் வலியுறுத்தி பேசினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -