திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்க பாதைக்கருகாமையில் ஏற்பட்ட விபத்தொன்றில் கடும் காயங்களுக்கு உள்ளான. இருவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்து சம்பவம் இன்று ( 17.07.2019 ) காலை 6. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து அவிசாவலை பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கில் ஒன்றும். கினிகத்தேனை பகுதியிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவர் கடும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர.;
குறித்த விபத்து மோட்டார் சைக்கிலை செலுத்தி நபருக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.