பெண்ணொருவரை கடத்திச் சென்ற வழக்குடன் தொடர்புடைய இருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் இருவரும் விளக்கமறியலில்


எப்.முபாரக்-
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை கடத்திச் சென்ற வழக்குடன் தொடர்புடைய இருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்எம்.ஹம்ஸா இன்று(18) உத்தரவிட்டார்.
மஹதிவுல்வெவ,மொறவெவ பகுதியைச் சேர்ந்த 41,மற்றும் 26 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்த பெண்ணொருவரை கடத்திச் சென்றதாக தெரிவித்து சந்தேக நபர்களுக்கெதிராக திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கின் போது வழக்குத் தவனைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே கைது செய்து பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -